October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வரும் பயணிகள் விமானங்களுக்கு தற்காலிக தடை!

இலங்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்துக்கள் முன்னெடுக்கப்படுவதுடன், சரக்கு விமானங்களின் சேவைகளும் தொடரும் எனவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருவதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான  சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.