June 14, 2025 17:33:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடு!

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக இம்மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் மே 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்டமாக, 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரையிலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு இம்மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.