July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரண தண்டனைக் கைதி ‘வெலே சுதாவின்’ பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ரிட் மனு

போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா எனும் விதானகே சமன்த குமாரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, மேம்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெலே சுதாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடைக்கால தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்கக் கோரி வெலே சுதாவின் தாயார் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் ஊரு ஜூவா மற்றும் கொஸ்கொட தாரக ஆகிய குற்றக் கும்பல் உறுப்பினர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போதே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மகனின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக வெலே சுதாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.