![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/1024px-SL_Kandy_asv2020-01_img07_Bogambara_Prison-e1621234859762.jpg?fit=800%2C481&ssl=1)
போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று அங்குள்ள கட்டட கூரையின் மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
கைதிகளுக்கு விரைவாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் விரைவாக பிணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.
சுமார் 40 கைதிகள் வரை இவ்வாறு கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.