July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்காமல் மக்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள்; ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல்,அரசாங்கம் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதை மீட்டெடுக்க முடியும். ஆனால் இழந்த உயிர்களை எங்களால் மீட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,நிபுணர்களின் ஆலோசனையை கவனத்திலெடுத்து அதற்கமைய செயற்பட வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டைப் பூட்ட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தால் அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

உயிர்களை காப்பாற்றுவதே அரசாங்கத்தின் கடமை. நாம் அனைவரும் அந்த நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.