
இலங்கையின் பொது பல சேனா அமைப்பு சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை பரப்பும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை மதங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பிரசாரங்கள் இனங்களுக்கிடையில் குரோதத்தை உருவாக்கியுள்ளன என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பல சேனா போன்ற சிங்கள தேசியவாத குழுக்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை தொடர்ந்தும் பிரசாரம் செய்கின்ற அதேவேளை,சிங்கள தேசியவாத குழுக்கள் மத மற்றும் சிறுபான்மையினர்களை சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.
மேலும்,முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரோதங்களை தூண்டும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில்லை எனவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.