October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பட்டம் விட வீட்டின் கூரையில் ஏறிய சிறுவன் உள்ளிட்ட மூவர் கீழே விழுந்து பலி!

File Photo

வீட்டின் கூரை மீது ஏறி பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த போது, கூரை உடைந்ததால் மேலிருந்து கிழே விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையின் காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 6 வயது சிறுவனும், அந்தச் சிறுவனின் 46 வயது தந்தையும், அயல் வீட்டைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று மாலை, இரண்டு மாடிகளை கொண்ட வீட்டின் கூரையில் நின்று பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது திடீரென கூரை உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மூவரும் கூரைப் பகுதியில் இருந்து நிலத்தில் விழுந்துள்ள நிலையில், அயலவர்கள் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.