June 14, 2025 22:26:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது!

இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 30 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சிலாபம், சமிதுகம கடற்கரை பகுதியில் கடந்த 12, 13ஆம் திகதிகளில் கடற்படையினரும், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் படகுகளின் மூலம் வெளிநாட்டுக்கு செல்ல தயார் நிலையில் இருந்த போதே கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.