July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு!

Photo: Facebook/Kumanan

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்த மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரினால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அங்கு புதிதாக கொண்டுவந்து வைக்கப்பட்டிருநந்த நினைவுக்கல் ஒன்றும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.