June 15, 2025 3:25:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கும், அந்தப் பகுதியில் மக்கள் ஒன்று கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் ஒன்று கூடும் வகையில் எந்த நிகழ்வும் நடத்தப்படக் கூடாது என்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தவை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுச் சின்னங்கள் இனந்தெரியாதோரினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.