
file photo: Facebook/ Bandaranaike International Airport
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகளின் வீசா காலம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் தங்கியிருப்போர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலம் நிறைவடைந்திருப்பின், ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வீசா புதுப்பிக்கப்படாத காலத்துக்கு தண்டப்பணம் விதிக்கப்பட மாட்டாது என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.