July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குற்றக் கும்பல் தலைவர் ‘கொஸ்கொட தாரக’ பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் மரணம்

குற்றக் கும்பல் தலைவர் ‘கொஸ்கொட தாரக’ எனும் தாரக பெரேரா விஜேசேகர பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் தடுப்புக் காவலில் இருந்த போதே, இவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

ஆயுதங்கள் சிலவற்றை மீட்பதற்காக மீரிகம பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, தாரக பெரேரா பொலிஸாரைத் தாக்க முயன்றதாகவும், அதன்போது பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்கொட தாரகவின் பாதுகாப்பு குறித்து கவனம் எடுக்குமாறு, அவரது சட்டத்தரணி பொலிஸ்மா அதிபருக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.