October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் 31 மாணவர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 31 பேருக்கு தொற்று இருப்பது உறுதுசெய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தென் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த மாணவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதுவரையில்,வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு குறித்த மாணவர்களை மாற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.