May 28, 2025 2:10:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மே 13 ஆம் திகதி இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு!

இலங்கையில் நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு தழுவிய முழு நேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் தடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இன்று முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான பயணத் தடை நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.