July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் இன்று முதல் நாடு தழுவிய இரவு நேர பயணத் தடை அமுல்’: இராணுவத் தளபதி

இலங்கையில் இன்று முதல் நாடு தழுவிய இரவு நேர பயணத் தடை அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு முழுவதும் பயணத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.