July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவின் நிலைமை இலங்கையில் ஏற்படுவதற்கு இடமளித்து விடாதீர்கள்’

கொவிட்-19 வைரஸ் நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், தகுதியான சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவமும், தகுதி இல்லாத அதிகாரிகளும் அமைச்சர்களும் நிருவாகத்தை கையில் எடுத்துள்ள காரணத்தினால் இந்தியாவின் நிலையொன்று இலங்கைக்கும் ஏற்படும் அச்சம் உள்ளதாகவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களை நம்பிய பொதுமக்கள் இறுதியாக வீதிகளில் இறந்து கிடக்கும் நிலையை உருவாக்கிவிட வேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் விடயத்தில் அரசாங்கம் இப்போதும் பொய்யான தரவுகளையே கூறிக்கொண்டுள்ளது.ஆனால் அமெரிக்கவின் வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையில் இலங்கையில் செப்டெம்பர் மாதமளவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் ஏற்படும் என கூறியுள்ளனர். இந்த தரவுகள் அரசாங்கத்திடம் இருந்தாலும் அதனை வெளிப்படுத்த மறுக்கின்றனர்.

இப்போதுள்ள நிலைமையில் நாட்டினை முறையாக நிருவகிக்காது விட்டால், ஊழியர்களை முறையாக வழங்க முடியாவிட்டால், குறைந்தது இரண்டு வாரங்களேனும் நாட்டை முடக்காது விட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் போன்றவர்கள் தூரநோக்குடன் இது குறித்து சிந்திக்காது போனால் இந்த நாடும் இந்தியாவை போன்றதொரு நிலைமையை அடையும். அவ்வாறான நிலையொன்றை உருவாக்க எம்மால் இடமளிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.