July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு “டிஜிட்டல் அடையாள அட்டை” வழங்க திட்டம்

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் கொவிட் தடுப்பூசி அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டையை வழங்கும் திட்டத்தில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கழகங்களும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார்.

இந்த முயற்சி சுகாதார அமைச்சு மற்றும் தகவல்,தொலைத் தொடர்புகள் திணைக்களத்தின் கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிஜிட்டல் அடையாள அட்டையில் தடுப்பூசி பெற்ற நபர் தொடர்பான விவரங்களும் தடுப்பூசி வகை, செலுத்தப்பட்ட திகதி, இடம், மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட வேண்டிய திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.