July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 பேர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று நண்பகல் வரையான காலப்பகுதியில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரை தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1346 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை பூகொட பகுதியில் அமைந்துள்ள South Asia Textiles Limited ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு பணியாற்றும் ஏனைய ஊழியர்களிடம் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் எவரும் தொற்றுக்கு இலக்காகியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.