June 15, 2025 18:40:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகளை இடைநிறுத்த முடிவு!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருந்து வெளி மாகாணங்களுக்கு நடத்தப்படும் பஸ் சேவைகளை இடை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு நடத்தப்படும் ரயில் சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

30 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தேவைப்பட்டால் மாவட்டங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை விதிக்கவும் நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.