June 14, 2025 18:06:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் அமுல்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மே 30 ஆம் திகதி வரையில் இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு தேவைப்பட்டால் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாட்டை விதிக்கவும் நடவடிக்கையெடுக்கப்படலாம் என்று கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.