July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ; போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ள சலுகை

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களுக்கும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சலுகை காலம் வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களும் காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த சலுகைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.