
60 மில்லியன் ரூபா வரையிலான பெறுமதியுடைய கொக்கெயின் பொதைப் பொருளுடன் தென்னாபிரிக்க பிரஜையொருவர் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யா நைரோபியில் இருந்து கட்டார் ஊடாக குறித்த நபர் இன்று காலை கட்டுநாயக்க விமா நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரின் பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, அதில் தலைக்கு பூசும் சம்பூ போத்தல்களில் சூட்சுமான முறையில் கொக்கெயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அந்த போத்தல்களுக்குள் இருந்து 2 கிலோ 29 கிராம் நிறையுடைய கொக்கெயின் மீட்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து அதனுடன தொடர்புடைய தென்னாபிரிக்க நாட்டவரை கைது செய்துள்ள சுங்க அதிகாரிகள் அவரை மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் தடுப்புப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.