
இலங்கையில் சனிக்கிழமை (8) மாத்திரம் 22 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் இதுவே இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சனிக்கிழமை மாத்திரம் நாட்டில் 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 123,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 1,335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.