February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடத்தல் வழக்கிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விடுவிக்கப்பட்டார்

நபர் ஒருவரை கடத்திச்சென்று உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் என காலி உயர்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ஜி. எஸ். நிஷங்கா விடுத்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்துஹெட்டிகம உட்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.