![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/FB_IMG_1611939545587-1.jpg?fit=1024%2C648&ssl=1)
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர்கள்,ராகமா மருத்துவமனையில் 8 தாதியர்கள், கராபிட்டி மற்றும் கெகல்லே ஆகிய இடங்களில் தலா 4 தாதியர்கள் இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதிகரித்து வரும் கொவிட் நெருக்கடிக்கு மத்திய தாதியர்கள் குறைவளவான ஓய்வு நேரங்களை எடுத்துக்கொண்டு அதிகளவான நேரங்களில் பணிபுரியும் நிலைமை காணப்படுவதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.