July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தீர்ப்பு தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.

குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப்பெறாமையின் காரணமாக கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படவிருந்த விவாதத்தை ஒத்திவைக்க சபாநாயகர் தலைமையில் கடந்த 04 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டமா அதிபரினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து எதிர்வரும் 18 ஆம் திகதி கூடும் பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் அறிவிக்க உள்ளதுடன், அன்றைய தினம் கூடும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பதற்கான திகதி குறித்து தீர்மானிக்க முடியுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.