June 13, 2025 12:34:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ- அமெரிக்க தூதுவர் அலெய்னா சந்திப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நாட்டின் கொரோனா தொற்று நிலைமை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் விளக்கியுள்ளார்.