May 25, 2025 1:55:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனேடிய உயர்ஸ்தானிகரிடம் சஜித் பிரேமதாச விடுத்துள்ள வேண்டுகோள்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொனை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன் போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள கொரோனா தொற்று காரணமாக ஒரு நாடாக இலங்கை எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.