May 25, 2025 13:32:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான்கு மாதங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

கடந்த நான்கு மாதங்களில் 13 ஆயிரத்து 797 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 168 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கியதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.