
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவரல் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையை விதிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாட்டவர்கள் வருவதற்கும் மலேசிய அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு மலேசியா தடைவிதித்திருந்த நிலையில், இன்று முதல் மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் இணைந்ததாக கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தோர் வருவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.