June 12, 2025 11:10:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மே 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் பரீட்சையை நடத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு பரீட்சையை ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.