![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/01-1.jpg?fit=800%2C535&ssl=1)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது எமது தலமைமை விடுதலை செய்?, ரிஷாட்டை ஏன் கைது செய்தாய் காரணத்தை வெளிப்படுத்து, ரிஷாட்டை விடுதலை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.