June 11, 2025 19:05:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலித்தீன், பிளாஸ்டிக் தடையை மீறிய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சு சட்ட நடவடிக்கை

இலங்கையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தடையை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்கும் நோக்கில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்துக்குப் பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 20 மில்லி மீட்டருக்குக் குறைவான சிறிய பொதிகளும் (சச்சட் பெக்கட்) தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டு நிறுவனங்கள் 24 மில்லி மீட்டர் கொள்ளளவு கொண்ட பொதிகளை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தியுள்ளன.

இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த நிறுவனங்கள் இரண்டுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.