
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
1000 ரூபா கிடைத்ததில் இருந்து மேலதிக கொடுப்பனவு கிடைப்பதில்லை எனவும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும், தோட்ட அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துமே தொழிலாளர்கள் பொகவந்தலாவ- ஹட்டன் பிரதான வீதியில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘காலையில் இருந்து இரவு வரை வேலை வாங்குவதாகவும் அதில் எந்த பயனும் இல்லை. எனவே தோட்ட அதிகாரி வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ‘வார நாட்களில் மூன்று நாட்கள் வேலை தருவதாக கூறி இரண்டு நாட்கள் வேலை தருவதாகவும் 20 ஆயிரம் ரூபா கொடுத்ததில் பிரயோசனம் இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியோடு பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.