
இலங்கையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களின் திறன் மற்றும் கையிருப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அவசியமான அளவு ஒக்ஸிஜன் இதுவரையில் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் டலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தவிர்ந்த, ஏனைய இடங்களிலும் ஒக்ஸிஜன் வழங்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.