May 30, 2025 21:31:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டன!

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இன்று காலை முதல் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தபளதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதன்படிகொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம வேகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் நீலதண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் மற்றும் அன்புவழிபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.