July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுங்கள்’

கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் அவரை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 04 ,05 ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்றுநோய் சூழல் காரணமாக சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருமாறும் நரேந்திர பெர்னாண்டோவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.