July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகளவான  கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா

இலங்கையில் இன்றைய தினத்தில் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும், நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த நான்காவது சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 108,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 530 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 667 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.