![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-20-at-12.42.30-PM.jpeg?fit=1024%2C576&ssl=1)
களுத்துறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி களுத்துறை மாவட்டத்தில் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொல்துன்ன, இங்குருதலுவ, மிந்தலன, மோரபிடிய,பெலேந்த, ஹெடிகல்ல மற்றும் மோரபிடிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதியாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீதியாவல கிராம உத்தியோகத்தர் பிரிவும், மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வலல்லாவிட தெற்கு, மாகலன்தாவ, போதலாவ, கட்டுகெலே, வெல்மீகொட, கீழ் ஹவெஸ்ஸ, மிரிஸ்வத்த மற்றும் பெலவத்த கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் ஹெலஹெர பொலிஸ் அதிகாரப் பிரிவில் சருபிம கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளளன.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் குறித்த பிரதேசங்களை முடக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.