May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்!

இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தனது 68 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கையின் 33 ஆவது பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய மஹிந்த பாலசூரிய,1978 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி நன்னடத்தை உதவி பொலிஸ் கண்காணிப்பாளராக பொலிஸ் துறையில் இணைந்தார்.

2009 நவம்பர் 3, அன்று பொலிஸ்மா அதிபர் நியமனம் பெற்ற இவர், 2011 ஜூன் 1 வரை அந்த பதவியை வகித்திருந்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் மூத்த பொலிஸ்மா அதிபரான இவர், செயல்பாட்டு கட்டளை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நலன்புரி பதவிகளை வகித்தார்.

மேலும் இலங்கையில் 119 பொலிஸ் அவசர சேவையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இவர் முக்கியமானவராக இருந்தார்.

அத்தோடு, பிரேசில் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கை தூதராகவும் பணியாற்றியுள்ளார்.