July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுவிக்கக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பஸார் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பொதுமக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷாட் பதியுதீன் சபாநாயகருக்கு அறிவிக்கப்படாத நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம், அதன் தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரிஷாட் பதியுதீனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.