July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியாவில் பஸ் விபத்து: சிறுவர்கள் உட்பட பலர் காயம்

நுவரெலியா மாவட்டம் ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 20 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இராகலை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் மாகுடுகல தோட்டப் பகுதியில் மரக்கறி தோட்டம் ஒன்றில் விழுந்துள்ளது.

இதன்போது பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய நிலையில் பஸ்ஸில் பயணித்த 20 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 20 பேரும், ஹைய்பொரஸ்ட் வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றதாகவும், இவ்விபத்து தொடர்பில் இராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

This slideshow requires JavaScript.