
சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு கம்பளை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான பொய்யான தகவல்களை பரப்புவது தண்டனைக்குறிய குற்றம் எனவும், இதன்படியே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனின் கைத் தொலைபேசியை மீட்டுள்ள கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.