July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

நேற்று இரவு அவர் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவரை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இரண்டு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருக்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தை அவர் பார்வையிடவுள்ளதுடன், அது குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.