June 13, 2025 23:39:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா எதிரொலி; அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேற்ற பகுதி மூடப்படுகிறது

அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேற்ற பகுதி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மீள அறிவிக்கும் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அம்புலன்ஸ் மற்றும் பேருந்துகள் குறித்த வௌியேற்ற பகுதியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்கள் அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ வெளியேற்றத்தை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டாவ ஊடாக வாகனங்கள் உள்நுழைய முடியும் எனவும் குறித்த பகுதியில் கட்டணம் அறவிடப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.