July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்; சிறிய அறிகுறிகள் தோன்றினாலும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் பரவி வரும் திரிபு அடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதிக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போதுவரை நாட்டில் 3 கர்ப்பிணி தாய்மார்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் சிறிய அறிகுறிகள் தோன்றினாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே அறிவுறுத்தினார்.