July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாக மருந்து விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை செலுத்துவதற்கு தேவையான 350,000 தடுப்பூசிகள்  கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளின் 500000 டோஸ்கள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை மருந்தக  கூட்டுத்தாபனம் மேலதிக டோஸ்களை கொள்வனவு செய்து இருந்தது.

ஏற்கனவே 9 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவர்களுக்கான இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.