July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் கடற்படையினரின் முகாம் முன்பாக இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது முல்லைத்தீவு – செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரமோகன் நிஷாந்தன் (வயது 19) எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, செல்வக்குமார் சயந்தரூபன் (வயது 20) எனும் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.