February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உதைப்பந்தாட்ட அணியின் கொடியில் இருந்த உறுமும் புலி – பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு

 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் தொடரில் அணி ஒன்றின் கொடியில் காணப்பட்ட உறுமும் புலியின் சின்னத்திற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ஊரணி மைதானத்தில் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகியது.

இதன்போது, அணிகளின் கொடிகள் ஏற்றப்படுகையில் அதில் அணியொன்றின் கொடியில் புலியின் சின்னம் இருந்தமையினால் பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கு வந்துள்ளனர்.

 அந்த சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டு அவர்கள் மைதானத்திலிருந்து சென்றுள்ளனர்.