June 1, 2025 11:32:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குருநாகல் இப்பாகமுவவில் வெடிப்புச் சம்பவம்: இருவர் காயம்!

குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ, பன்னல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டாசுகளிலிருந்து வெடிமருந்துகளை அகற்றி, அவற்றை இரும்புக் குழாயொன்றினுள் அடைத்த மின் இயந்திரத்தின் மூலம் அந்தக் குழாயை வெட்டும்போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் காயமடைந்த 22 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு இளைஞர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.